Thursday, May 9, 2024

Latest Posts

திருமலை நிலஅதிர்வு குறித்து அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் ஆராய்வு

திருகோணமலையில் அண்மையில் இடம்பெற்ற நில அதிர்வு குறித்து உரிய அதிகாரிகளை அழைத்து கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் ஆகியோருடன் ஆளுநர் இது குறித்து கலந்துரையாடினார்.

முன்கூட்டிய பாதுகாப்பு நோக்கம் கருதி மாவட்டத்தில் உள்ள பாடசாலை, வைத்தியசாலை மற்றும் உள்ளூராட்சி சபையினருக்குத் தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு கிழக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.  

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.