குடும்பஸ்தர் அடித்துக் கொலை, கொலையாளி மனைவியா? கள்ளக்காதலனா?

0
55

நுவரெலியா – பீட்று சின்னகாடு பிரிவில் வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான சண்முகம் தர்மராஜ் வயது (44) என்ற நபரே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

பொல்லால் தாக்கப்பட்டு காயங்களுடன் வீட்டில் உயிரிழந்து கிடந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபருக்கும் அவரின் மனைவிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும், மனைவிக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையில் உள்ள தகாத உறவு இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கணவரை மனைவி தாங்கி கொலை செய்ததாரா அல்லது மனைவியின் தகாத உறவுக்காரர் தாக்கினாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here