ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தம்மிக்க பெரேராவின் பெயரைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் சில தரப்பினர் சதித்தனமான முறையில் முக்கிய வார இறுதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த விளம்பரம் குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அவ்வாறான நிறுவனம் எதுவும் இல்லை.
அதன்படி, இந்த போலி விளம்பரத்தை வெளியிட்ட ஒருவரை தற்போது கண்டுபிடிக்க முடியவில்லை.
எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு விடியும் முன்பே, ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்திருப்பதை இது காட்டுகிறது.