கொழும்புக்கு வர முயன்ற மாணவர் பேரணி களனியில் கலைப்பு, 7 பேர் கைது – படங்கள் இணைப்பு

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி களனி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (18) முன்னெடுக்கப்பட்ட மாணவர் பேரணியை பல்கலைக்கழகத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் கலைத்தனர்.

7 மாணவர்களை பொலிசார் கைது செய்தனர்.

பல்கலைக்கழக மாணவர் பேரவையின் ஏற்பாட்டில் இந்த எதிர்ப்பு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

மாணவர் ஊர்வலம் கொழும்புக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் கண்டி வீதியில் களனி ட்ரையர் சந்தியை அண்மித்த பகுதியில் பெருமளவான பொலிசார் குவிக்கப்பட்டிருந்ததோடு, அருகிலேயே தண்ணீர் பீரங்கிகளும் நிறுத்தப்பட்டிருந்தன.

ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கலைத்ததையடுத்து, களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப்...

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...